இந்த நிலையில் மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பற்றி ஜூன் 12ம் தேதியே தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாகவும், எந்த பதிலும் வரவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.2 பெண்கள் மற்றும் வெளிநாட்டில் இயங்கும் பழங்குடியின அமைப்பு இமெயில் மூலம் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் தேசிய மகளிர் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது வீடியோ வைரலானதால் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. மேலும் மணிப்பூர் வீடியோ காட்சியை ட்விட்டரில் இருந்து நீக்க ட்விட்டர் இந்தியா நிறுவனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
The post மணிப்பூர் கொடூரம் குறித்து கடந்த மாதமே அனுப்பப்பட்ட புகாரை கண்டுகொள்ளாத தேசிய மகளிர் ஆணையம் appeared first on Dinakaran.