இவற்றில் முதல் தளத்தில் இருந்து மார்ச் 10ம் தேதிக்குள்ளும், மீதமுள்ள 2 தளத்தில் இருந்து மே 10ம் தேதிக்குள்ளும் ராணுவத்தினர் வாபஸ் பெற இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், முதல் ராணுவ குழு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல் தளத்தில் ராணுவத்தினருக்கு பதிலாக ராணுவம் அல்லாத தொழில்நுட்ப குழு பணி அமர்த்தப்படுகிறது. அவர்கள் நேற்று முன்தினம் இரவு மாலத்தீவின் அட்டு பகுதிக்கு சென்றடைந்தனர். உடனடியாக பொறுப்பு ஒப்படைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
The post மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தின் முதல் குழு திரும்பியது appeared first on Dinakaran.