இந்நிலையில், கடந்த 11ம் தேதி காலை திலகவதி, தனது வீட்டின் முற்றத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனே பெற்றோர் விசாரித்துள்ளனர். அதில், பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக திலகவதி கூறினார். உடனே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர்.
அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு திலகவதியை உறவினர்கள் கொண்டு வந்து சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே திலகவதி இறந்துவிட்டார் எனத்தெரிவித்தனர். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு பெண் அதிகாரி தற்கொலை appeared first on Dinakaran.