இரு தரப்பிலும் பை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மோதல் நடந்த இடத்திற்கு சேலம் மாவட்ட எஸ்பி அருண்கபிலன் நள்ளிரவில் வந்து நேரடி விசாரணை நடத்தினார். அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலுக்கு காரணமான சமூகவலைதள இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்ட 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெற்றிசெல்வன் என்பவரின் தூண்டுதலில் பதிவிட்டது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். கல்வீச்சில் படுகாயமடைந்த ஏட்டு முருகவேல் புகாரின் பேரில், 40 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். விஏஓ சரவணன் கொடுத்த புகாரின் பேரில், மோதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இம்மோதல் தொடர்பாக ஆத்தூர் ஆர்டிஓ ரமேஷ் தலைமையில் தனியாக விசாரணை நடக்கிறது.
The post ஆத்தூர் அருகே நள்ளிரவு பரபரப்பு இருதரப்பினர் பயங்கர மோதல்: 11 பேர் கைது appeared first on Dinakaran.