அதன்படி, ஏரியில் நிறைந்த மாவட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் பகுதியில் 381 ஏரிகள் இருக்கின்றன. இதில், மேற்கூறிய 45 ஏரிகள் 100 சதவீதமும், 35 ஏரிகள் 75 சதவீதமும், 95 ஏரிகள் 50 சதவீதமும், 158 ஏரிகள் 25 சதவீதமும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளில், 113 ஏரிகள் 100 சதவீதமும், 154 ஏரிகள் 75 சதவீதமும், 145 ஏரிகள் 50 சதவீதமும், 103 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. மேலும், மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்துக்கு நீர் பாசனத்திற்கு உகந்த பெரிய ஏரிகளான தாமல், ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான செங்கல்பட்டு – கொளவாய் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் தையூர், மானாமதி, கொண்டங்கி, காயார், சிறுதாவூர் மணிமங்கலம் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
The post காஞ்சி, செங்கையில் 158 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.