காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உண்டியல் வசூல் ₹83.72 லட்சம்

காஞ்சிபுரம்: மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உண்டியல்கள் கடந்த 20.6.2024ம் தேதிக்கு பிறகு, மீண்டும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. கோயிலில், இருந்த 2 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தொகை ₹83 லட்சத்து 72 ஆயிரத்து 350 ரூபாயும், தங்கம் 325 கிராமும், வெள்ளி 1225.509 கிராமும் இருந்தன. கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் காரியம் சுந்தரேசன், கோயில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்களை கோயில் பணியாளர்கள் திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உண்டியல் வசூல் ₹83.72 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: