அவர் கேமரா பதிவை பார்த்தபோது வீட்டில் அடையாளம் தெரியாத ஒரு நபர் வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து அஸ்வின் ஜி ஷா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஏற்கனவே எனது வீட்டில் 150 கிராம் தங்க நகை திருடுபோய் உள்ளது. மீண்டும் நாங்கள் இல்லாதபோது வீட்டில் ஆள் நடமாட்டம் உள்ளது என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். திருட்டுப்போன அன்றே அஸ்வின் ஜி ஷா ஏன் புகார் அளிக்கவில்லை என போலீசார் கேட்டபோது, அவர் சரியான பதில் இல்லை. எனவே முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து வரும் அஸ்வின் ஜி ஷாவிடம் ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.
The post நகை வியாபாரி வீட்டில் 150 கிராம் நகை கொள்ளை? பல மாதங்கள் கழித்து புகார் appeared first on Dinakaran.