இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் கே.கண்ணன் ஆஜராகி, ‘அனைத்து தரப்பினரும் பங்கேற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது சாதியை குறிப்பிட்டு அழைப்பது பாகுபாடு பார்க்கும் வகையில் உள்ளது’’ என்றார். அரசு பிளீடர் பி.திலக்குமார் ஆஜராகி, ‘‘சாதியை குறிப்பிடுவது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் உத்தரவை முறையாக பின்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். காளைகளின் உரிமையாளர்களின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்படும். சாதி அடையாளம் மற்றும் அடைமொழி பெயர்கள் அறிவிக்கப்படாது. இதை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், சாதிப்பெயர்களை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவை பின்பற்றியும், தீண்டாமை உறுதிமொழி எடுப்பது தொடர்பான மனுதாரர் கோரிக்கையை அரசு தரப்பில் பரிசீலிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டு, மனுவை முடித்து வைத்தனர்.
* 15ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
வருகிற 15ம் தேதி (திங்கள்) அவனியாபுரத்திலும், 16ம் தேதி (செவ்வாய்) பாலமேட்டிலும், 17ம் தேதி (புதன்) அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளரின் சாதிப்பெயரை அறிவிக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.