இதுகுறித்து, தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் தங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியில் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் தொடர்பு கொண்ட நபரின் அடையாளத்தை சரிபார்க்கவும், பேடிஎம் போன்ற எந்தவொரு சேவையும் உங்கள் ஓடிபியை தொலைபேசியில் பகிரும்படி கேட்க மாட்டார்கள். உங்கள் ஓடிபியை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல்கள் மூலமாக யாருடனும் பகிர வேண்டாம்.
தெரிந்த நிறுவனத்திலிருந்து எஸ்எம்எஸ் வருவது போல் தோன்றினால் அதனை கவனமாக ஆராய வேண்டும். சந்தேகத்திற்கிடமான அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு உங்கள் வங்கி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு ெசய்தால் மோசடி நபர்களிடம் இருந்து பணத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். இதுபோன்ற மோசடிக்கு யாரேனும் ஆளாகியிருந்தால் உடனடியாக சைபர் க்ரைம் உதவி எண் 1930க்கு போன் செய்து சம்பவத்தை உடனே புகாராக அளிக்க வேண்டும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஐவிஆர் இ-வாலட் மூலம் நூதன மோசடி பொதுமக்கள் எஸ்எம்எஸ் மூலம் வரும் தகவலை நம்ப வேண்டாம்: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் அறிவுரை appeared first on Dinakaran.