இந்த நிலையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி 26வது வார்டு இடலாக்குடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இடலாக்குடி நாயுடு மருத்துவமனை பின்புறம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாயில் புதர்கள் மண்டி, அந்த பகுதியில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் தேங்கி தண்ணீர் சீராக செல்லவில்லை எனவும், அந்த தண்ணீர் வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் பார்வையிட்டார். மேலும் கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்றி, தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேலும் சுகாதாரப்பணிக்கு முக்கியத்தும் கொடுத்து அதிகாரிகள் பணி செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேயர் உத்தரவுவிட்டதை தொடர்ந்து ஒரு பொக்லைன், ஒரு கிட்டாச்சி கொண்டு கால்வாயில் தேங்கி கிடக்கும் புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது. இந்த பணியை இன்றும், நாளையும் செய்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆய்வின்போது மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, பகவதிபெருமாள், பிட்டர் பாலு, தொழில்நுட்ப உதவியாளர் பத்மநாபன், கவுன்சிலர் சொர்ணதாய், வட்டச்செயலாளர்ள் சாகுல், அன்சாரி, பகுதி செயலாளர்கள் துரை, ஷேக்மீரான், தொண்டரணி ராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
The post இடலாக்குடியில் கால்வாயில் மண்டியுள்ள புதர்களை அகற்ற வேண்டும் : ஆய்வின்போது மேயர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.