இதனையடுத்து கடந்த 3 நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள உலகின் 2வது மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், எண்ணெய் கிணறுகள், எரிபொருள் ஆலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிந்தன. அதேபோல ஈரானின் ராணுவ முகாம்கள் உட்பட 150 இடங்களை குறிவைத்து இஸ்ரேலின் போர் விமானங்கள், டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் நடத்திய வான்வெளி தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் பலத்த சேதமடைந்தன. ஈரானும், இஸ்ரேலின் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இன்று நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவ்னெர் நெதன்யாகு-அமித் யார்தேனி ஜோடியின் திருமணம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழலில் இஸ்ரேல் – ஈரான் நாடுகள் 3வது நாளாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் அங்கு போர் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இஸ்ரேலியர்கள் காசாவில் பணயக்கைதிகளாக உள்ள நிலையில், பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என விமர்சனங்கள் எழுந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
The post இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம்: நெதன்யாகுவின் மகன் திருமணம் ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.
