மேலும் அமலக்கத்துறையானது தனது விசாரணையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். குறிப்பாக சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்குகளில் யாரோ ஒரு நபர் அளித்த வாக்குமூலத்தை கொண்டு திருப்தியடைந்து அமலாக்கத்துறை வழக்கு பதிகிறது, ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்குக்கான உரிய ஆதாரம், முகாந்திரம் உள்ளிட்டவற்றை நிரூபிக்க தவறுகிறது. எனவே புலன்விசாரணையின் தரத்தை அமலக்கத்துறை அமைப்பானது மேம்படுத்தி கொள்ள வேண்டும், ஏனெனில் வாக்குமூலம் கொடுத்த நபர் பின்னாநாளில் அவர் அளித்த வாக்குமூலத்தின் மீது உறுதியாக இருப்பாரா ? குறுக்கு விசாரணையை எதிர்கொள்ளும் தன்மையில் இருப்பாரா ? என்பது கடவுளுக்கே தெரியாது. எனவே அமலக்கத்துறை இதுபோன்ற வழக்குகளில் அறிவியல்பூர்வமான புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
The post விசாரணை தரத்தில் ஈடி கவனம் செலுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.