ஜஸ்பிரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த பவுலர் என்பதில் சந்தேகமில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு துரதிர்ஷ்டம். இருப்பினும் தொடர் முழுவதும் அவர்கள் அற்புதமாக விளையாடினர்’’ என்று தெரிவித்துள்ளார். இதுபோல் வகார் யூனுஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “மகத்தான வீரர்கள் அழுத்தமான சூழ்நிலையில் தான் எழுவார்கள். விராட் கோஹ்லி அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பும்ராவின் 2 ஓவர்கள் தான் அனைத்தையும் மாற்றியது. அவர் தரமான உலகக் கோப்பை வின்னர். இந்தியா மற்றும் ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார். ஷாஹீன் அப்ரிடி பதிவில் “அற்புதமான சர்வதேச டி20 கேரியருக்கு சிறப்பான முடிவு விராட் கோஹ்லி. டி20 உலகக் கோப்பை இந்தியா வென்றதற்காக வாழ்த்துக்கள். உங்கள் இருவருக்கும் (ரோஹித், விராட்) அற்புதமான டி20 கேரியருக்காக வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். இதுதவிர சக்லைன் முஸ்டக், அஹ்மத் சேஷாத் போன்ற மேலும் பல பாகிஸ்தான் வீரர்கள் இந்தியவீர்களை வாழ்த்தியுள்ளனர்.
The post நினைவில் கொள்ளக்கூடிய இந்த வெற்றிக்கு இந்திய வீரர்கள் தகுதியானவர்கள்: பாகிஸ்தான் ஜாம்பவான்கள் வாழ்த்து appeared first on Dinakaran.