மும்பை: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மும்பையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காணாமல் போன மாலுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.