இருப்பினும் அவருக்கு பதிலாக நாளை இஷான் கிஷன் இடம்பெற வாய்ப்பு உள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹர்திக்பாண்டியா இன்று அணியுடன் இணைகிறார். இருப்பினும் நாளை அவர் களம் இறங்கமாட்டார். இதனால் சூர்யகுமார் இடத்தை தக்க வைத்துக்கொள்வார். பவுலிங்கில் பும்ரா (14விக்கெட்) கட்டுக்கோப்பாக செயல்படுகிறார். ஷமி கடந்த போட்டியில் இங்கிலாந்தை மிரட்டினார். 2 போட்டியில் அவர் 9 விக்கெட் எடுத்துள்ளார். குல்தீப் யாதவ் (10), ஜடேஜா (8) தங்கள் பங்களிப்பை அளித்து வருகின்றனர். மறுபுறம் இலங்கை 6 போட்டியில் 4 தோல்வி, 2 வெற்றி என பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
நாளை இந்தியா, 6ம் தேதி வங்கதேசம், 9ம்தேதி நியூசிலாந்துடன் மோத உள்ளது. இந்த 3 போட்டியிலும் வென்றாலும் அரையிறுதி வாய்ப்பு கிடைப்பது அரிது தான். பேட்டிங்கில் சமீரா சமரவிக்ரமா (331),பதும் நிசங்கா (289), கேப்டன் குசால் மெண்டிஸ் (268) ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடினாலும் மிடில் ஆர்டரில் அதிரடி வீரர்கள் யாரும் இல்லை. பந்துவீச்சு மோசமாக உள்ளது. மதுஷங்கா மட்டும் 13 விக்கெட் எடுத்துள்ளார். சூப்பர் பார்மில் வலுவாக உள்ள இந்தியாவை இலங்கை சமாளிப்பது கடினம் தான். பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
The post வலுவான இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? வான்கடேவில் நாளை மோதல் appeared first on Dinakaran.