தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து நாளை மதியம் 2.35 மணிக்கு ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்எம்வி 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான கவுன்ட்டவுன் இன்று மதியம் ஒரு மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி தோல்வியடைந்த பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மீண்டும் இந்தியா அனுப்பும் சந்திரயான் 3 விண்கலத்தை உலகமே உற்று நோக்கி வருகிறது.
இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் வெற்றியடைய வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் சந்திரயான்-3-ன் சிறிய மாதிரியை சாமி சன்னதியில் வைத்து பிரார்த்தனை செய்தனர். வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
The post சந்திராயன்-3 வெற்றியடைய திருப்பதி கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்.: விண்கலத்தின் மாதிரியை வைத்து வழிபாடு!! appeared first on Dinakaran.