தொடர் மழையால் சுவர் இடிந்து குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

ஹாவேரி: தொடர்மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் இறந்த சம்பவம் ஹாவேரியில் நடந்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மழைக்கு மரங்கள், மின்கம்பங்கள் கீழே விழுந்து வருகிறது. அதேபோல், ஆங்காங்கே வீடுகளும் இடிந்து விழுந்து வருகிறது. இந்தநிலையில், ஹாவேரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சவனூர் தாலுகாவின் மாதாபுரா கிராமத்தில் நள்ளிரவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், சென்னம்மா (30), அவரது மகள்களான அமூல்யா மற்றம் அனன்யா ஆகிய இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த இரண்டு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக சவனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post தொடர் மழையால் சுவர் இடிந்து குழந்தைகள் உள்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: