ஒடிசா போலீஸ் நிலையத்தில் ராணுவ வீரரின் காதலிக்கு போலீசார் பாலியல் தொல்லை: கவர்னர் மாளிகை, முதல்வர் இல்லம் முற்றுகை

புவனேஷ்வர்: ஒடிசாவின் பாரத்பூர் காவல்நிலையத்தில் கடந்த 15ம் தேதி ராணுவ வீரர் மற்றும் அவரது காதலி ஆகியோர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது உள்ளூரை சேர்ந்த இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டது.  இது தொடர்பாக இருவரும் அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர். காவல்நிலையத்தில் ராணுவ வீரரின் காதலிக்கு போலீசார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த தகவல் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிஜூ ஜனதா தளத்தை சேர்ந்த மகளிர் பிரிவினர் ஆளுநர் மாளிகை முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜ அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்கள். சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இளைஞர் மற்றும் மாணவர் பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கெர்ணடு முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

The post ஒடிசா போலீஸ் நிலையத்தில் ராணுவ வீரரின் காதலிக்கு போலீசார் பாலியல் தொல்லை: கவர்னர் மாளிகை, முதல்வர் இல்லம் முற்றுகை appeared first on Dinakaran.

Related Stories: