பெங்களூருவில் பரபரப்பு; 30 துண்டுகளாக வெட்டி இளம்பெண் படுகொலை: பிரிட்ஜில் அடைத்து வைத்த கொடூரம்

பெங்களூரு: பெங்களூருவில் வயாலிகாவல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனேஷ்வரா பிளாக் 4வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் வெளிமாநிலத்தை சேர்ந்த மகாலட்சுமி (26) என்பவர் வசித்துவந்தார். இந்நிைலயில் நேற்று இவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அந்த மகாலட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில், பெண்ணின் தாய் மற்றும் அக்கா ஆகிய இருவரும் அவரை பார்க்க வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் உடல் பல துண்டுகளாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பெங்களூருவில் மல்லேஸ்வரத்தை அடுத்த முனேஷ்வரா பிளாக்கில் ஜெயராம் என்பவரது வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்கியிருக்கும் அந்த பெண் 4-5 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், கொலையாளி அந்த பெண்ணுக்கு தெரிந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 30க்கும் அதிகமான துண்டுகளாக வெட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

The post பெங்களூருவில் பரபரப்பு; 30 துண்டுகளாக வெட்டி இளம்பெண் படுகொலை: பிரிட்ஜில் அடைத்து வைத்த கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: