தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களை அப்பகுதி மக்களோடு மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. இருப்பினும் ரசாயன கிடங்கில் பணியில் இருந்தவர்கள் குடியிருப்பில் இருந்தவர்கள் என 7 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தீயானது கட்டுப்படுத்தமுடியாமல் முழுவதும் பரவி வருவதால் தீயணைப்பு துறையினர் தற்போது தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
