இந்நிலையில், நேற்று முன்தினம் காலை மனைவியை பார்க்க சென்ற உலகநாதன், தாழங்குப்பம், சத்தியவாணி முத்துநகர் 11வது தெரு அருகே வருமாறு கூறியுள்ளார். அங்கே வந்தவுடன் வீட்டிற்கு வரும்படி மனைவியை அழைத்துள்ளார். வரமுடியாது என கூறவே, தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உலகநாதன், தான் ஏற்கனவே கொண்டுவந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து லீனா வின் தலையில் வெட்டியுள்ளார்.
இதில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த எண்ணூர் போலீசார், கத்தியால் மனைவியை வெட்டிய உலகநாதனை கைது செய்தனர். பிறகு சிறையில் அடைத்தனர்.
The post மனைவியை வெட்டிய கணவன் கைது appeared first on Dinakaran.