வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

சென்னை: திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (41). இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சிபாஸ் கல்யாண் ஆகியோர் உத்தரவின்படி, உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் வட்டாட்சியர் என்.மதியழகன் விசாரித்தனர். அப்போது, 25 கிலோ வெடி மருந்து, பட்டாசு தயாரிக்க கலக்கப்படும் மூலப் பொருட்கள் 50 கிலோ, உப்பு 25 கிலோ என பட்டாசு தயாரிக்க வைத்திருந்த பொருட்களை போலீசார் கைப்பற்றினர். பிறகு சசிக்குமாரை கைது செய்தனர்.

The post வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: