அரசு மருத்துவமனையில் கருத்தரிப்பு மையம்: காங். உறுப்பினர் கோரிக்கை

சென்னை: அரசு மருத்துவமனையில் கருத்தரிப்பு மையம் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று பொன்னேரி துரை.சந்திரசேகர் (காங்கிரஸ்) பேசும்போது, ”மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை காரணமாக, பெண்கள் கருத்தரித்தல் இப்போது கேள்விக்குறியாகி வருகிறது. தனியார் கருத்தரிப்பு மையங்களில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை குழந்தை பாக்கியம் பெற இளம் பெண்கள் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம் தொடங்க வேண்டும். ஏனென்றால் தரமான மருத்துவம் பெறுவது ஒரு தனி மனிதனின் உரிமை. அந்த மருத்துவத்தை மக்களுக்கு இலவசமாக கொடுப்பது ஒரு அரசின் கடமை. ஏழை, எளிய தாய்மார்கள் மத்தியில் இது நல்ல வரவேற்பை பெறும்” என்றார்.

The post அரசு மருத்துவமனையில் கருத்தரிப்பு மையம்: காங். உறுப்பினர் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: