நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்கெட் பகுதியில் நடத்திய சோதனையில் ஜெயசிம்மன் (55) என்பவரது கடையில் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.