சிறுமியிடம் அத்துமீறல் போக்சோவில் வாலிபர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி எம்கேபி நகர் 13வது மத்திய குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (37). இவரது மனைவி லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, லதா கணவரை பிரிந்து, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே லதாவின் தங்கையான 15 வயது சிறுமியுடன் ரவிக்குமார் பழகி வந்துள்ளார். மேலும், தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த லதா மற்றும் குடும்பத்தினர் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மகளிர் போலீசார், ரவிக்குமார் மீது போக்சோ வழக்கு பதிந்து நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியிடம் அத்துமீறல் போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: