இந்நிலையில், அப்பெண் வேலை செய்யும் ஒரு வீட்டின் கார் டிரைவராக வேலைபார்ப்பவர் அரி (41). இவர், அப்பெண்ணின் 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதுகுறித்து தனது தாயிடம் அச்சிறுமி கூறி கதறி அழுதிருக்கிறாள். இதையடுத்து கார் டிரைவர் அரியை அப்பெண் கண்டித்து வந்துள்ளார். எனினும், அந்த சிறுமிக்கு கார் டிரைவர் அரி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கார் டிரைவர் அரி தலைமறைவாகி விட்டார். போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
The post 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கார் டிரைவர் எஸ்கேப் appeared first on Dinakaran.