தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் அங்கு வந்து, மீனவர்களுடன் இணைந்து பைபர் படகுகள் மூலம் கடலில் தேடினர். ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை ஜோஸ்வா கிடைக்கவில்லை. தொடர்ந்து நேற்று 2வது நாளாக ஜோஸ்வாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாணவன் ஜோஸ்வா உடல் நேற்று கரை ஒதுங்கியது. போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post ராட்சத அலையில் மாயமான சிறுவன் உடல் கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.