பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை

சென்னை: பண்ணை பசுமை கடைகளில் தமிழ்நாடு அரசு வெங்காயம், தக்காளி விற்பனையை தொடங்கியது. விலை சற்று உயர்ந்ததை அடுத்து, பொதுமக்கள் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை செய்யபப்டுகிறது. நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: