இதன் காரணமாக கஜேந்திர சிங் தோமர் குடும்பத்தினர் லெபா கிராமத்தை விட்டு வௌியேறினர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் மூலமாக இரு குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டனர். இந்நிலையில் கஜேந்திர சிங் தோமர் குடும்பம் லெபா கிராமத்துக்கு திரும்பியது. இந்நிலையில், நேற்று காலை இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில், இரு தரப்பினரும் தடிகளால் தாக்கி கொண்டனர். தொடர்ந்து தீர் சிங் குடும்பத்தினர் கஜேந்திர சிங் குடும்பத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் கஜேந்திர சிங் தோமரின் 2 மகன்கள் மற்றும் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
The post குப்பை கொட்டும் விவகாரத்தில் முன்பகை ம.பி.யில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சுட்டு கொலை appeared first on Dinakaran.