தமிழ்நாட்டில் 19ம் தேதி முதல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கை: 2023ம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது.

மேலும் பங்கு பெறும் வீரர், வீராங்கனைகள் 2005 ஜனவரி 1ம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். பங்குபெறும் வீரர், வீராங்கனைகள் கீழ்க்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் இரண்டு சான்றிதழ்கள் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை (அ) பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2023 ஜனவரி 1ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன் நகராட்சி, கிராம பஞ்சாயத்துகள் மூலம் வழங்கப்பட்டது). பள்ளி சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ், பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்படாது.

The post தமிழ்நாட்டில் 19ம் தேதி முதல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு appeared first on Dinakaran.

Related Stories: