இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ கூறுகையில், ‘ஜி20 நாடுகளின் பிரகடனத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து குறிப்பிடப்படவில்லை. ஜி-20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரகடனத்தில், பெருமைபட ஒன்றுமில்லை. இருந்தும் உக்ரைனின் நட்பு நாடுகள், எங்களுக்காக செய்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும் ஜி20 பிரகடனத்தின் ஒருபகுதியை வெளியிட்டுள்ளார். அதில் உக்ரைன் குறித்த சில பகுதிகளை சிவப்பு நிறத்தில் மார்க் செய்யப்பட்டிருந்தது.
The post ஜி20 மாநாட்டின் பிரகடனத்தால் ‘பெருமைபட ஒன்றுமில்லை’: உக்ரைன் அரசு அதிகாரி கோபம் appeared first on Dinakaran.