ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் டெல்லி ஆர்கேபுரம் காவல்நிலையத்துக்கு திடீர் வருகை

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் டெல்லி ஆர்கேபுரம் காவல்நிலையத்துக்கு திடீர் வருகை புரிந்துள்ளார். சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் காவல்நிலையத்துக்கு வந்ததால் பரபரப்பு நிலவியுள்ளது. சத்யபால் மாலிக் கைது செய்யப்படவில்லை என்றும், அவராகவே காவல்நிலையத்துக்கு வந்திருப்பதாக டெல்லி போலீசார் விளக்கமளித்துள்ளார். டெல்லி சோம்விகாரிலுள்ள இல்லத்தில் வைத்து சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டார் என்ற தகவலுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். சத்யபால் மாலிக் புல்வாமா தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றசாட்டு கூறியவராவார்.

The post ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் டெல்லி ஆர்கேபுரம் காவல்நிலையத்துக்கு திடீர் வருகை appeared first on Dinakaran.

Related Stories: