இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஆக்னல் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோர், முதல் காதலனான லோகேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆக்னல், அந்தப் பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு, நாம் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை உன்னை திருமணம் செய்ய உள்ள முதல் காதலனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ஆக்னலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post முதல் காதலனுடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிடுவேன்: இளம்பெண்ணுக்கு 2வது காதலன் மிரட்டல்; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.