கொடூரமான கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவரை பாஜவில் சேர்த்து புகலிடம் கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கமலாலயம் என்பது ரவுடிகளின் புகலிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் மாறியிருப்பது தமிழக பாஜ எந்த திசையில் பயணிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பற்றியும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு குறித்தும் வாய்கிழிய நாள்தோறும் பேசுகிற அண்ணாமலை, கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கும், பாஜவுக்கும் உள்ள தொடர்பு அம்பலமாகி வருவது குறித்து என்ன விளக்கம் தரப் போகிறார் என்பதை நாடே எதிர்பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ரவுடிகளுக்கும் பாஜவுக்கும் உள்ள தொடர்பை குறித்து விளக்குவாரா? அண்ணாமலைக்கு செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.