இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று ஆண்டுகளாக வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் வாதிட்டார். காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், வழக்கின் விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.
தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, வைகைச்செல்வனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The post மாஜி அமைச்சர் வைகைச்செல்வனுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.