ஆனால், இதுவரை 47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இதனால், அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் முதல் முகையூர் வரை 31 கி.மீ தூரத்துக்கு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி கடந்த 2022 மே மாதம் துவங்கியது. கடந்த மே 10ம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், 31 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதால் அடுத்த ஆண்டு ஜூலை 31ம் தேதி பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு வரை அமைக்கப்படும் விரைவுச் சாலைக்கான பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் 2024 ஜூலை 29க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் தாமதமாக நடந்து வருகவதால் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில்தான் பணிகள் முடிவடையும் நிலை உள்ளது. இதேபோல், பெரும்புதூர்- வாலாஜாபேட்டை இடையேயான சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி தாமதமாகியுள்ளது. இதில், காரைப்பேட்டை வரையிலான 34 கி.மீ தூர பிரிவில் பணிகள் கடந்த 2019ல் துவங்கியது. பணிகளை 2021 மே மாதம் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை. புதிய கான்டிராக்ட் விடும் பணிகள் இந்த மாதம் துவங்கும். காரைப்பேட்டையில் இருந்து வாலாஜாபேட்டை வரையிலான பணிகள் 2021 பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெறும்.
The post 2019ல் துவக்கப்பட்ட பணிகள் கூட இன்னமும் முடியவில்லை தமிழக தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் காலதாமதம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் appeared first on Dinakaran.