டாஸ்மாக் வழக்கில் வீடுகள், அலுவலகங்களுக்கு வைத்த சீலை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்..!!

சென்னை: டாஸ்மாக் வழக்கில் வீடுகள், அலுவலகங்களுக்கு வைத்த சீலை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. டாஸ்மாக் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு அமலாக்கத்துறை பணிந்தது. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகங்களுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்தது. இருவரது வீடுகள், அலுவலகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பி ஒப்படைக்கவும் அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்தது. இதனிடையே,இடைக்கால மனு மீதான தீர்ப்பு 4 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post டாஸ்மாக் வழக்கில் வீடுகள், அலுவலகங்களுக்கு வைத்த சீலை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: