இதையடுத்து சுனில்குமார் அந்த போட்டோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார். இந்நிலையில் சுனில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சூர் மாவட்ட பாஜ சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுனில்குமாரிடம் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. தனக்கு நடிகர் டொவினோ தாமஸ் தேர்தல் ஆணையத்தின் தூதர் எனத் தெரியாது என்று அவர் விளக்கம் அளித்தார். அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக் கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தது.
The post நடிகருடன் போட்டோ எடுத்த வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.