காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச்செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சட்டத்தின் நெறிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்பட்டது. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.