வாய்க்காலின் நடுவில் ஆழமான பகுதிக்கு சென்ற, ராக்கிமுத்து, சிவக்குமார் ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் கூச்சலிட்டார். அதற்குள் 2 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், வாய்க்காலில் இறங்கி தேடினர். அவர்கள் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.தகவலறிந்து பவானிசாகர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் 2 தொழிலாளர்களின் உடலையும் தேடும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post பவானிசாகர் அருகே வாய்க்காலில் மூழ்கி 2 பேர் சாவு?: கோவையை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.