இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49,023 பணியாளர்களுக்கு ரூ.29 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீதம்
தனியார் தோட்ட தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.438 வழங்கிடவும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.7.78 கோடி ஆகும். அதோடு, தமிழ்நாடு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 20%போனஸ் வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், திருத்திய ஊதிய விகிதங்களை நிலுவை தொகையுடன் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ரூ.12.78 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.