ஸ்ரீநகரில் மர்ம பொருள் கண்டுபிடிப்பு: எல்லையில் ராணுவம் குவிப்பு


ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் பரிம்போரா அருகே காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருளை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். தகவலறிந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை கைப்பற்றி, அவற்றை செயலிழக்க செய்தனர். சந்தேகத்திற்கிடமான அந்த பொருளின் தன்மையை ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சில மணி நேரங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் மூத்த அதிகாரிகள் கூறினர்.

The post ஸ்ரீநகரில் மர்ம பொருள் கண்டுபிடிப்பு: எல்லையில் ராணுவம் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: