மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

தாம்பரம்: தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், 6ம் தேதி தாம்பரம், பல்லாவரம், வண்டலுர் வட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டத்தில் அடங்கியுள்ள தாம்பரம், பல்லாவரம், வண்டலுர் வட்டங்களில் குடியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் தொடர்பாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் தலைமையில், வருகிற 6ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, போன்ற மருத்துவ வசதிகள், மாற்றுத்திறனாளிகள் நிதி உதவித்தொகை சேவைகள் நடைபெறும் எனவும், இதில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

The post மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: