பழநி: தொடர் விடுமுறை காரணமாக பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருநாள் மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறையால் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படையான பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகளவு இருந்தது. இதன் காரணமாக பழநி அடிவாரத்தில் உள்ள அனைத்து லாட்ஜ்களும் ஹவுஸ் புல்லானது. வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
The post தொடர் விடுமுறை காரணமாக பழநி கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.