குறிப்பிட்ட சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் சீமான் அக்.30ல் ஆஜராக உத்தரவு..!!

ஈரோடு: அவதூறாக பேசிய வழக்கில் ஜாமின் கோரிய சீமான், வரும் 30ம் தேதி நேரில் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அருந்ததியர் மக்கள் பற்றி அவதூறாக பேசிய புகாரில் சீமான் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கில் ஜாமின் கோரி ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

The post குறிப்பிட்ட சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் சீமான் அக்.30ல் ஆஜராக உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: