மேலும், கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் லாபம் ரூ.3 குறைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் வரலாறு காணாத அளவு அதிகரித்து ரூ.69,000 கோடியை தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை குறைவு போக்கு அடுத்த காலாண்டிலும் தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார்.
The post கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்?: எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் appeared first on Dinakaran.