ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் 7,050 க்கு விற்பனையானது அதே போல் 24 கேரட் 7,691க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு சற்று ஏற்றம் இறக்கமாக விலை காணப்பட்டது. இன்று 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் 7,120க்கும் 24 கேரட் 7,761க்கு விற்கப்படுகிறது.

நேற்று விலையில் ஒரு கிராம் ரூ.7095 க்கு விற்கப்பட்டது. இன்று ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,120க்கு விற்கப்படுகிறது. நேற்று சவரன் ரூ.56,760 விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.200 உயர்ந்து 56,960 க்கு விற்கப்படுகிறது.

The post ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: