திருவாரூர் மாவட்டம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.கே. ராஜ்குமார், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார். லட்சக்கணக்கில் கடன் வாங்கி பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மிகுந்த மன வேதனை அடைந்த அவர், தன் நிலத்தில் பயிர்கள் அழிவதைக் கண்டு கண்ணீர் வடித்துள்ளார். பின்னர் நிலத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் தானே அழித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு தன் நிலத்திலேயே உயிரை விட்டிருக்கிறார்.
தண்ணீர் இன்றிப் பயிர்கள் கருகியதால், கண்ணீர் விட்டு கதறிய ராஜ்குமார் உயிர் இழந்தது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்கி ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயி மரணம்: அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.! வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.
