இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக (12.03.2024) அங்குள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பயிர்களை கவாத் வெட்டி கழிவுகளை வனபகுதியில் போட்டு எரித்ததன் காரணமாக சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதியில் இருக்க கூடிய அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது.
இந்த செயலுக்கு காரணமானவர்கள் குறித்து வனத்துறையினர் கண்டறிந்த பின்னர் தோட்ட உரிமையாளர் ஜெயசீலபாண்டியன், கருப்பையா, மோகன், ஜெயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குன்னூர் சிறையில் அடைத்துள்ளனர்.
The post குன்னூர் அருகே காட்டுத்தீ பரவ காரணமான தேயிலைத் தோட்ட உரிமையாளர் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.