கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசியில் காலண்டர் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் காலண்டர்கள் ஆர்டர் கொடுத்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டுமே காலண்டர்களை கேட்டு வாங்கி வருகின்றனர். பெரும்பாலும் ஆர்டர் கொடுத்தவர்கள் காலண்டர் பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை.
காலண்டர் உற்பத்தியாளர் ஒருவர் இதுகுறித்து கூறும்போது, ‘‘ சென்னை, நெல்லை உட்பட 8 மாவட்டங்களில் பெய்த கனமழை சிவகாசி காலண்டர் தொழிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டர் கொடுத்த பல பேர் கேட்கவில்லை என்பதால் உற்பத்தி செய்யப்பட்ட காலண்டர்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இந்த 8 மாவட்டங்களில் இருந்து புதிய ஆர்டர்கள் வராததால் ரூ.10 கோடி மதிப்பிலான காலண்டர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது’’, என்றார்.
The post 8 மாவட்டங்களில் தொடர் கனமழை ரூ.10 கோடி காலண்டர் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.